' Medjugorje - Messages From Our Lady 2019 - Tamil

Our Lady Of Medjugorje

Messages From 2019 In Tamil

January 25, 2019 "அன்புக் குழந்தைகளே, மனம் மாறுங்கள் என்று ஒரு தாய் அழைப்பதைப் போல் இன்று உங்களை அழைக்கின்றேன். அமைதியோடு ஜெபத்தில் ஈடுபடுவதற்காக உங்களுக்கு கொடுக்கப்பட்ட அருமையான தருணம் இதுவே. எனவே உங்கள் இதயங்களில் நம்பிக்கையும் விசுவாசமும் வளர்ந்து, இன்னும் அதிகமாக ஜெபிக்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொருநாளும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கை சரியான பொறுப்புள்ள பாதையில் செல்லும். அன்புக் குழந்தைகளே, இந்த உலகில் வாழும் நீங்கள் இறைவனோடு நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர வேண்டும். மேலும், கடவுளோடு நீங்கள் கொண்டிருக்கும் அன்புறவை பிறரோடு பகிர்ந்து அதற்கு சாட்சிகளாக விளங்க வேண்டும் என்று அழைக்கின்றேன். நான் உங்களோடு இருந்து உங்களுக்காக ஜெபிக்கின்றேன். ஆனால், நீங்கள் ஆம் என்று சம்மதம் தெரிவிக்காமல் நானாக எதுவும் செய்ய இயலாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். என் குரலுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி." ஜனவரி 25, 2019

February 25, 2019 "அன்புக் குழந்தைகளே, இன்று நான் உங்களை புது வாழ்விற்காக அழைக்கின்றேன். நீங்கள் எவ்வளவு வயதானவர் என்றாலும் இந்த இரக்கத்தின் காலத்தில் உங்கள் இதயங்களை இயேசுவிற்கு திறந்து கொடுப்பது அவசியம் . இயற்கையை உருமாற்றுவது போல உங்களை அவர் உருமாற்றுவார். அதனால், அவரது அன்பின் புது வாழ்வைப் பெற்று, விண்ணை நோக்கியும், விண்ணைச் சார்ந்தவை குறித்தும் உங்கள் இதயங்களைத் திறந்து கொடுப்பீர்கள். இறைவன் உங்கள் மீது கொண்டுள்ள அன்பின் பொருட்டு என்னை உங்களோடு இருப்பதற்கு அனுமதித்துள்ளதால் இன்றும் நான் உங்களோடு இருக்கிறேன். எனது குரலுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி." பிப்ரவரி 25, 2019

March 25, 2019 "அன்புப் பிள்ளைகளே, இது அருளின் காலம். இயற்கை புது வாழ்விற்காக தன்னையே புதுப்பித்துக் கொள்வதுபோல நீங்களும் மனமாற்றம் பெற அழைக்கப்படுகிறீர்கள். அன்புக் குழந்தைகளே, கடவுளை நாடிச் செல்ல முடிவெடுங்கள். கடவுள் உங்களிடம் இல்லாததால் நீங்கள் மகிழ்ச்சியை இழந்து வெறுமையாக இருக்கின்றீர்கள். எனவே ஜெபம் உங்கள் வாழ்வாக மாறும் அளவிற்கு ஜெபியுங்கள். உங்களைப் படைத்த கடவுளைத் தேடுங்கள். கடவுளின் படைப்புகளை உற்று நோக்குங்கள். சாவதற்காக அல்ல மாறாக வாழ்வதற்காக போராட வேண்டும் என்று இயற்கை கற்றுத் தருகிறது. உங்கள் மனதில் அமைதி இல்லாததாலும், நீங்கள் அடுத்தவரை சகோதரராக மதிப்பதில்லை என்பதாலும், உங்கள் மனதையும் நாடுகளையும் போர்களும் போராட்டங்களும் ஆட்சி செய்கின்றன. எனவே, அன்புக் குழந்தைகளே, ஜெபத்தோடு கடவுளிடம் திரும்பி வாருங்கள். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
மார்ச் 25, 2019

April 25, 2019 "அன்புள்ள பிள்ளைகளே, இது அருளின் காலம். இறைவனின் இரக்கம் உங்கள் ஒவ்வொருவர் மீதும் பொழியப்படும் காலம். குழந்தைகளே, வெறுப்பும் சமாதானமின்மையும் உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் ஆட்கொண்டு விட அனுமதிக்காதீர்கள். அன்பு செய்யவும் ஜெபிக்கவும் நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள். அலகை சமாதானமின்மையும் பிரச்சினைகளையும் உங்களுக்குள் விதைக்க நினைக்கின்றான். ஆனால், அன்புக் குழந்தைகளே, உங்களுக்காக இறந்து உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியை பிறருக்கு வெளிப்படுத்துபவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். உங்களுக்கு நிறைவாழ்வை அளிப்பதற்காகவே அவர் சாவை வென்று வெற்றி பெற்றுள்ளார். எனவே, அன்புக் குழந்தைகளே, நீங்கள் அவரோடு உயிர்த்தெழுந்துள்ளீர்கள் என்று மகிழ்ச்சியோடு சாட்சியம் பகிருங்கள். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
ஏப்ரல் 25, 2019

May 25, 2019 "அன்புக் குழந்தைகளே, நான் உங்களோடு இருந்து உங்களுக்கு கற்பித்து மனமாற்றத்தின் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்ல இறைவன் தமது இரக்கத்தினால் என்னை அனுமதித்துள்ளார். குழந்தைகளே, நீங்கள் அனைவரும் உங்களது மீட்பிற்காகவும், உங்கள் வழியாக பிறரது மீட்பிற்காகவும் திறந்த மனதுடன் ஜெபிக்க அழைக்கப்பட்டுள்ளீர்கள். குழந்தைகளே, கவனமாக இருங்கள். உலக வாழ்வு குறுகியது. ஆனால், விண்ணுலக வாழ்வு உங்களது நன்மைத்தனத்திற்கு ஏற்றவாறு உங்களுக்காக காத்திருக்கிறது. எனவே, இறைவனின் கரங்களில் நல்ல கருவிகளாக அமைவதற்காக ஜெபியுங்கள், ஜெபியுங்கள், இடைவிடாது ஜெபியுங்கள். எனது குரலுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி."
மே 25, 2019


Last Modified 06/07/2019