' Medjugorje - Messages From Our Lady 2010 - Tamil

Our Lady Of Medjugorje

Messages From 2010 In Tamil

jan 02 2010
அன்புள்ள குழந்தைகளே! எனது மகனோடு உங்களை ஒன்றினைக்க நான் ஆசிக்கின்றேன். எனவே, முழு நம்பிக்கையோடும், அன்போடும் என்னைப் பற்றிக்கொள்ளுங்கள். சிறிய பிள்ளைகளே! பயப்படவேண்டாம். நான் உங்களோடு இருக்கிறேன். உங்கள் அருகில் இருக்கிறேன். நீங்கள் உங்களை மன்னிக்கவும், பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்ளவும், முழுமையான உள்ளத்தோடு கடவுள் முன் மன்டியிட்டு பரிகாரம் தேடுவதற்கான வழிகளை சுட்டிக்காட்டவும் நான் இருக்கிறேன். கடவுளின் அன்பினின்று உங்களை பிரித்து, உங்கள் ஆன்மாவை சீரழிக்கும் அனைத்தையும் விட்டுவிடுங்கள். அவரோடு அவரில் என்றும் ஒன்றித்திருங்கள். கடவுளை முதன்மையாக அன்பு செய்து புதுவாழ்வை அணிந்துகொள்ள, இன்றே தீர்மானியுங்கள். நன்றி.
2 ஐனவரி 2010

jan 25 2010
அன்புள்ள குழந்தைகளே! நீங்கள் தனிமையில் செபிப்பதனால் விசுவாசம் எனும் விதை உங்கள் உள்ளத்தில் வேரூன்றி வளர்ந்து, பிறர் முன் கடவுளுக்கு சாட்சியம் பகரும் ஆனந்தம் கிடைக்கின்றது. நான் உங்களுக்கு முன்மாதிரியாக, உங்களோடு இருக்கிறேன். உங்களைப் படைத்த கடவுளின் அன்பில் அக்களியுங்கள். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 ஐனவரி 2010

feb 25 2010
அன்புள்ள குழந்தைகளே! இது தேவ இரக்கத்தின் காலம். இயற்கை தனக்குள் இருக்கும் அனைத்து அற்புதமான வர்ணங்களையும் வெளிக்கொனரும் தருணம். அதைப்போலவே சிறிய பிள்ளைகளே, உங்களைப் படைத்த கடவுளுக்கு உங்கள் இதயங்களைத் திறந்து கொடுங்கள். அவ்வாறாக, அவர் உங்களை மறு உருவாக்கி, தமது சாயலில் உங்களை மீண்டும் மலரச்செய்து, உங்களுக்குள் தளர்ந்துபோன நன்மைத் தனங்களைப் புதுப்பித்து, நிறைவாழ்வைத் தேடும் புது உள்ளத்தை உங்களுக்கு அவர் அருள்வார். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 பிப்ரவரி 2010

mar 02 2010
அன்புள்ள குழந்தைகளே! இத் தவக்காலத்தில், இறைவனின் பாடுகளை தியானிக்கும் வேளையில், அவர் நமக்கு வாரி வழங்கிய அளவுகடந்த அன்பை உங்களோடு இணைந்து தியானிக்க நான் ஆசிக்கின்றேன். நீங்கள் தீமையினின்றும், சோதனைகளிலிருந்தும் விடுபடுவதற்கு எனது அருள் உதவுகிறது. பாவங்களிலிருந்து உங்களை மீட்டு நல்லவர்களாக மாற்றி, நீங்காத சமாதானத்தை வாரி வழங்கும் எனது மகனின் அன்பை உங்களுக்கு நான் கற்றுத்தருவேன். சமாதானத்தின் இராக்கினியான என் சமாதானம் உங்களோடு இருப்பதாக! என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
2 மார்ச் 2010

mar 25 2010
அன்புள்ள குழந்தைகளே! சோதனைகள் உங்களைத் தாக்க காத்திருக்கும் இத் தருணத்தில், அசையா நம்பிக்கையோடு செபிக்க உங்களை நான் அழைக்கின்றேன். உங்களுக்கு அருளப்பட்டுள்ள கிறித்துவ வாழ்வை மகிழ்ச்சியோடும், தாழ்ச்சியோடும் வாழ்ந்து, பிறருக்கு சாட்சியம் பகருங்கள். நான் உங்களோடு இருக்கிறேன். உங்களை எனது மகன் இயேசுவிடம் அழைத்துச் செல்கிறேன். அவரே உங்களுக்கு பலமும், ஆதரவுமாக இருப்பாராக. என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 மார்ச் 2010

apr 25 2010
அன்புள்ள குழந்தைகளே! எனது பரிந்துரைக்காக நீங்கள் சிறப்பாக செபிக்கும் இவ் வேளையில், உங்கள் செபங்கள் மூலமாக அநேகரது இதயங்கள் எனது வார்த்தைகளுக்கு செவிமடுப்பதற்காக திறக்கப்படட்டும். எனது கருத்துக்களுக்காகவும் செபியுங்கள். நான் உங்களோடு இருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்காகவும் என் மகனிடம் பரிந்துரைக்கிறேன். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 ஏப்ரல் 2010

may 25 2010
அன்புள்ள குழந்தைகளே! வாழ்வு என்னும் கொடையை கடவுள் உங்களுக்கு அளித்து உங்களுக்குள்ளும், உங்களைச் சுற்றியுள்ள அனைத்து நன்மைகளையும் காத்து, பிறருக்கு முன்மாதரியான தூய வாழ்வை வாழ அழைக்கின்றார். அதே வேளையில், சாத்தானும் நாகரீகம் என்ற மாயையைக் காட்டி, அவனது தீய வழிக்கு உங்களை இட்டுச்செல்ல அயராது பாடுபடுகிறான். எனவே சிறிய பிள்ளைகளே, எனது மாசற்ற இதயத்தின் அன்போடு, அனைத்திற்கும் மேலாக கடவுளையும், அவரது கட்டளைகளையும் அன்பு செய்யுங்கள். இவ்வாறாக, உங்கள் வாழ்வின் பயனை அடைவீர்கள். இவ்வுலகிலும் சமாதானம் ஆட்சி செய்யும்.
என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 25 மே 2010

jun 25 2010
அன்புள்ள குழந்தைகளே! எனது வார்த்தைகளை மகழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, அதன்படி வாழ உங்களை நான் அழைக்கின்றேன். சிறிய பிள்ளைகளே, இவ்வாறாக எனது மகனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பீர்கள். எனது ஆசையெல்லாம் உங்கள் அனைவரையும் என் மகனிடம் அழைத்துச் செல்வது மட்டுமே. அவர் ஒருவரே உள்ளத்திற்கு உண்மையான சமாதானமும், பேரின்பமும் தர வல்லவர். எனது ஆசீரும் அன்பும் உங்களோடு இருப்பதாக. என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 ஜூன் 2010

jul 25 2010
அன்புள்ள குழந்தைகளே! மகழ்ச்சியோடு என்னைப் பின்பற்ற உங்களை நான் மீண்டும் அழைக்கின்றேன். உங்கள் மீட்பரும் எனது மகனுமான இயேசுவிடம் உங்களை நான் அழைத்துச் செல்கிறேன். அவரின்றி உங்களுக்கு மகழ்ச்சியும், சமாதானமும் எதிர்காலமும், பேரின்பமான நிறைவாழ்வும் இல்லை என்பதை நீங்கள் முழுமையாக உணரவில்லை. எனவே, சிறிய பிள்ளைகளே, இயேசுவிடம் சரணடைவதற்கும், மகழ்ச்சியோடு செபிப்பதற்கும், இத் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி
25 ஜூலை 2010

aug 25 2010
அன்புள்ள குழந்தைகளே! மிக்க மகழ்ச்சியோடு, புதுவாழ்விற்கு உங்களை அழைக்கின்றேன். செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள். தனிமையில் செபிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் சிறிது நேரத்தை ஒதுக்கி, ஆத்தும சோதனை செய்து மகழ்ச்சியோடு செபியுங்கள். எனது அன்பும் ஆசீரும் உங்களோடு இருப்பதாக. என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 ஆகஸ்டு 2010

sep 25 2010
அன்புள்ள குழந்தைகளே! எனது தாயன்போடு சமாதானத்தை உங்களுக்கு உரித்தாக்குகிறேன். நீங்கள் விசுவாசமும், தாழ்ச்சியும் குன்றியவர்களாகவே இருக்கின்றீர்கள். எனவே, உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துங்கள். சிறிய பிள்ளைகளே, பேச்சைக் குறைத்து உங்களது மன மாற்றத்திற்காக இன்னும் அதிகமாக உழைக்க உங்களை நான் அழைக்கின்றேன். இவ்வாறாக, உங்கள் வாழ்வு கனிதரும் சாட்சிய வாழ்வாக மாறும். இடைவிடாது செபியுங்கள். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 செப்டம்பர் 2010

oct 25 2010
அன்புள்ள குழந்தைகளே! உங்களது மன மாற்றத்திற்காக செபியுங்கள். புனிதர்களிடம் மன்றாடுங்கள். புனிதர்களின் பரிந்துரைகளை நாடுங்கள். புனிதர்கள் உங்களுக்கு முன் மாதிரியாகவும், உங்கள் மன மாற்றத்திற்கு உதவுபவர்களாகவும், உங்களை நிலை வாழ்விற்கு அழைத்துச் செல்பவர்களாகவும் விளங்குவார்களாக. என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 அக்டோபர் 2010

nov 25 2010
அன்புள்ள குழந்தைகளே! நான் உங்கள் இதயங்களை உற்று நோக்கும் போது, அவை நம்பிக்கை இழந்தும், அமைதியின்றியும், ஏக்கத்துடனும் இருப்பதைக் காண்கிறேன். நீங்கள் செபிப்பதும் இல்லை. உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கையும் இல்லை. எனவே, உங்களுக்கு நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அளிப்பதற்காக கடவுள் என்னை அனுப்பியுள்ளார். கடவுளின் இரக்கத்திற்கு உங்களது இதயத்தை திறந்து கொடுங்கள். அவர் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து, உங்கள் இதயங்களை சமாதானத்தில் நிரப்புவார். ஏனெனில் அவர் ஒருவரே சமாதானமும், நம்பிக்கையும் தர வல்லவர். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 நவம்பர் 2010

dec 02 2010
அன்புள்ள குழந்தைகளே! உங்களுக்காக எல்லாவித துன்பங்களையும் தாங்கிக்கொண்டிருக்கும் கடவுளின் அன்பை நீங்கள் உணர்ந்துகொள்ள உங்கள் இதயங்களை அவருக்கு முழுமையாகத் திறந்துகொடுப்பதற்கான முழு பலத்தையும் நீங்கள் பெற்றுக்கொள்வதற்காக செபியுங்கள். இந்தக் கருத்திற்காக நானும் உங்களோடு இணைந்து செபிக்கின்றேன். நீங்கள் செபமும், தபமும் செய்து மனமாறவேண்டும் என நான் அழைக்கின்றேன். எனது குழந்தாய், கடவுள் உனக்குத் தேவை. அவரின்றி உன்னால் ஒன்றும் செய்ய இயலாது. இதை நீ எப்போது புரிந்துகொண்டு முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறாயோ, அப்போது உனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேறும். தூய ஆவியின் வழியாக விண்ணரசு உங்களது இதயங்களில் மலரும். இதற்காகவே நான் உங்களை வழி நடத்துகின்றேன். நன்றி.
2 டிசம்பர் 2010

dec 25 2010
அன்புள்ள குழந்தைகளே! இன்று, நானும் எனது மகனும், மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் நிறைவாக உங்களுக்கு அளிக்கின்றோம். இதனால் நீங்கள் வசிக்கும் இடங்களில் மகிழ்ச்சியின் தூதுவர்களாகவும், சமாதானத்தின் சாட்சிகளாகவும் விளங்குவீர்களாக. சிறிய பிள்ளைகளே, இறைவனின் வரங்களும் சமாதானமும் நிறைந்தவர்களாக வாழுங்கள். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
டிசம்பர் 25 2010


Last Modified 12/26/2010