Our Lady Of Medjugorje
Messages From 2009 In Tamil
அன்புள்ள குழந்தைகளே! இன்றும் கூட நான் உங்களை செபம் செய்ய அழைக்கின்றேன். நீங்கள் செய்யும் செபங்கள் எனது இதயத்தில் விதைகளாக வந்து விழுகின்றன. அதை உங்களது ஆன்மாக்களின் மீட்பிற்காக என் மகன் இயேசுவிடம் கொடுக்கின்றேன். அன்பு பிள்ளைகளே! விண்ணக வாழ்வே உங்களது எதிர்காலம். எனவே விண்ணக வாழ்வை அன்பு செய்யுங்கள். இந்த உலகில் நீங்கள் பெற்றுள்ள செல்வங்கள் யாவும் உங்களைப் படைத்த கடவுளிடம் நெருக்கமாக வருவதற்கு உதவுகின்றன. நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதால்தான் இவ்வளவு நீண்ட காலம் நான் உங்களோடு இருக்கின்றேன். ஏனென்றால் என்னுடைய உதவியால் மட்டுமே நீங்கள் உங்கள் இதயங்களை கடவுளுக்குத் திறந்து கொடுக்க முடியும்.. உங்களில் சிலர் என்னுடைய வார்த்தைகளை ஏற்று அதன்படி வாழ்ந்துவருவதால், விண்ணக வாழ்வை நோக்கிய தூய வழியில் நடந்து கொண்டிருக்கிறார்கள். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 ஜனவரி 2009
அன்புள்ள குழந்தைகளே! ஒறுத்தல் முயற்சிகளும், செபமும், தவமும் நிறைந்த இந்த தவக்காலத்தில் நீங்கள் ஒப்புறவு அருட்சாதனம் செய்து உங்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு நான் அழைக்கின்றேன். இதனால் நீங்கள் பெறும் அருட்கொடைகள் உங்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கிறது. சிறிய பிள்ளைகளே! மனம்மாறி கடவுளுக்கும் அவரது சித்தங்களுக்கும் உங்கள் இதயங்களை திறந்து கொடுங்கள். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 பிப்ரவரி 2009
அன்னை மிர்ஜானாவிற்கு (வருடத்திற்கு ஒருமுறை) 2009 மார்ச் 18-ஆம் தேதி கொடுத்த சிறப்புச் செய்தி.
அன்புள்ள குழந்தைகளே! உங்கள் இதயங்களை நீண்ட நேரம் நேர்மையாக உற்று நோக்கும்படி நான் உங்களை அழைக்கின்றேன். அங்கு என்ன காண்கிறீர்கள்? உங்கள் இதயங்களின் எனது மகன் எங்கே? அவரைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்ற ஆசை எங்கே? எனது பிள்ளைகளே! "என் கடவுள் எனக்காக வைத்துள்ள திட்டம் என்ன? அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?" என்ற கேள்விகளை இந்தத் தவக்காலத்தில் கேளுங்கள். செபமும் தபமும் செய்து இரக்கமுள்ள இதயமுள்ளவர்களாக வாழுங்கள். உங்களை வழிநடத்தும் ஆயர்களை மறந்து விடாதீர்கள். அவர்கள் எனது மகனைவிட்டுப் பிரிந்துவிடாமல் நல்ல ஆயர்களாக தனது மந்தையை வழிநடத்தவேண்டுமென்று அவர்களுக்காக செபியுங்கள்.
அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும் ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு மீண்டுமொறுமுறை அன்னை கூறியதாவது: "நான் உங்களை எவ்வளவு அன்பு செய்கின்றேன் என்பதை நினைத்துப் பார்ப்பீரகளானால் நீங்கள் மகிழ்ச்சியால் நிறைந்து அழுவீரகள்", நன்றி.
19 மார்ச் 2009